ஒற்றைக்காலில் தவம் புரியும் அம்பிகையின் முன்பாக அக்னிஸ்வரூபமாக, ஜோதி வடிவமாக காட்சி தந்த இறைவன் என்பதால் சிவக்கொழுந்தீசர் என்ற திருநாமம் கொண்டார்.
கம்பை நதிக்கரையில் அம்பிகை தவம் செய்து கொண்டிருக்கையில், ஆற்று வெள்ளம் பெருகி ஓடி வந்தது. உடனே தான் பூஜிக்கும் லிங்கத்தை கட்டித் தழுவிக் கொண்டாள் அன்னை. அம்பிகையின் வளையின் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றார் இறைவன். அப்படி சக்தி தழுவி முத்தம் கொடுத்த ஸ்தலம் என்பதால் சக்திமுத்தம் என்றழைக்கின்றனர்.
திருவடிதீட்சை வேண்டிய அப்பர் பெருமானை இறைவன் நல்லூருக்கு வரும்படி பணித்த ஸ்தலம்.
செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டி, மங்கையர்க்கரசி, சோழ மன்னர்கள் அனைவரும் இளமைப் பருவத்தைக் கழித்த நகரம் என்பர். செம்பியன் மாதேவி கட்டிய கோவில்.
தேவாரத்திருத்தலம்.