ஸ்ரீ ராமனைப் பிரிந்து லங்கையில் தனித்திருந்த பாவம் போக சீதா தேவி இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தாள். பிரத்யட்சமான சிவபெருமானிடம் ராவணனுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த வானர சேனைகள் முக்தியடைய வேண்டும் என ராம - லட்சுமணர்கள் பிரார்த்தித்தனர். பின்னர் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இவ்விறைவனை வழிபட்டனர் என ஸ்தல வரலாறு.
குருவி ஒன்று ராமேஸ்வரம் சென்று கடலில் குளிக்க ஆசைப்பட்டு ராமரை சந்தித்து விண்ணப்பித்தது. சிறிய பறவை வெகு தூரம் பறந்து சென்று கஷ்டப்படாமலிருக்க, அம்பு எய்து பூமியில் நீர்ப்பெருக்கு ஏற்படுத்தினார். இதில் குளித்தால் ராமேஸ்வரத்தில் குளித்த பலன் கிட்டும் என்ற வரத்தையும் வழங்கினார். இதனால் இவ்வூர் குருவி ராமேஸ்வரம் என்ற பெயரைக் கொண்டது.
ராமன் பிரம்மாஸ்திரத்தால் உண்டாக்கிய குளம் பிரம்ம தீர்த்தம். கோதண்ட தீர்த்தம் என்றும் கூறுவார்கள்.
கடம்பவனம், சீதா ராமேஸ்வரம் என்றெல்லாம் பெயர்களைக் கொண்ட ஸ்தலம்.