இலங்கை செல்லும் முன்பாக ஸ்ரீ ராமர் இப்பகுதியிலுள்ள நெல்லிவனம் வழியே சென்றாராம். அப்போது பூமிக்கடியில் புதையுண்டிருந்த லிங்கத்தின் மீது நடந்ததால் கொண்ட தோஷம் நீங்க இத்தலத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கி, லிங்க பிரதிஷ்டை செய்து விரதமிருந்து வழிபட்டாராம். விரதத்தின்போது ஒரே ஒரு நெல்லிக்கனியை உண்டு சிரத்தையாக பூஜை செய்து வழிபட்டாராம்.
அவரது வழிபாட்டில் இறைவன் மகிழ்ந்தார். ராமர் குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட்டதால் இத்தலம் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது.
உத்ர ராமேஸ்வரம் என போற்றுகின்றனர்.
சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் - குரு ஸ்தலம்.