ஏரி காத்த ராமர் கோவில் என்றே பிரபலம். ்
ஆதியில், மகிழ மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் வகுளாரண்யம் எனப் பெயருற்றது. உத்தமச் சோழன் ்
என்னும் மதுராந்தக சோழனால் வேதமோதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால் ்
சோழனின் பெயரைக் கொண்டே மதுராந்தகம் என அழைக்கப்படலாயிற்று. ்
மதுராந்தகம் ஏரி உடையாமல் காத்ததனால்  ்இவர் ஏரி காத்த ராமர் எனப் போற்றப்படுகிறார்.
ப்ரம்ம வைவர்த்தம், பார்க்கவம் ஆகிய புராண நூல்களில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
சுகப்ரம்ம ரிஷி, விபாண்டக ரிஷி ஆகியோர் தவம் மேற்கொண்ட ஸ்தலம். சீதையைத் தேடிக் கொண்டு வந்த ்
ராமனிடம், தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு வருமாறு அழைத்தார் விபாண்டகர். பிறிதொரு சமயம் வருவதாக ்
வாக்களித்திருந்தார் ராமர். ராவணனிடமிருந்து சீதையை மீட்டுத் திரும்புகையில், விபாண்டகமகரிஷிக்கு ்
கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இத்தலத்திற்கு சீதாப்பிராட்டியுடன் வருகை தந்தார் ்
என ஸ்தல வரலாறு.
மதுராந்தகத்திலுள்ள பெரிய ஏரி ஒன்று, ஆண்டுதோறும் மழைக் காலத்தில் கரையை உடைத்துக் கொண்டு, ்
ஊருக்கு சேதம் விளைவிப்பது வழக்கமான ஒன்றாகும். கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆட்சியில் லயனஸ் ்
பிளேஸ் என்ற கலெக்டர் துரை,1795ம் வருஷம் ஏரிக்கரையை பலமாக கட்டி மேம்படுத்தினார். ஆனால் மழை ்
வெள்ளம் அதை சேதப்படுத்தி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மீண்டும் பணம் செலவழித்துக் கட்டினார் ்
மறுபடியும் கரை உடைந்தது.
பஜனை கோஷ்டியை சேர்ந்த பக்தர் ஒருவர், ஜனகவல்லித் தாயார் சந்நிதியை புதுப்பிக்க வேண்டி, நிதியுதவி ்
கேட்டு பிளேஸ் துரையை அணுகினார். உங்கள் தெய்வங்களால் ஊர் ஏரியைக் கூட காப்பாற்ற முடியவில்லையே,
பின் ஏன் அதற்கு வீண் செலவு, என கண்டித்து அனுப்பிவிட்டார் துரை.
அடுத்து பெய்த பெருமழையால் ஏரி எந்த நேரமும் உடைபடலாம் என்றிருந்த நிலையில், கலவரத்துடன் துரை, ்
ஏரியை பார்வையிட சென்றார். திடீரென்று தோன்றிய மின்னல் வெளிச்சத்தில், வில்லும் கையுமாக இரண்டு ்
திவ்யஸ்வரூப மூர்த்திகள் ஏரிக்கரையில் நிற்பதையும், ஏரி உடையாமல் காக்கப்பட்டிருப்பதையும் கண்டு,
பிளேஸ் துரை திகைத்து போனார்.
ஸ்ரீராமரின் அநுக்ரஹத்தை நேரில் கண்டறிந்த பிளேஸ் துரை, சர்க்கார் செலவிலேயே தாயார் சந்நிதியைக்
கட்டிக் கொடுத்தார். பிளேஸ் துரையின் உருவமும், சந்நிதி கட்டிய சாஸனமும் கோவிலில் உள்ளது.
காஞ்சியிலிருந்த ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக ஸ்ரீ ரங்கம் பயணித்துக் ்
கொண்டிருக்கையில், வழியில் இங்குள்ள ராமரை சேவிக்க இவ்வாலயம் எழுந்தருளினார். இங்கு பெரியநம்பிகள் ்
இருப்பதைக் கண்டதும், அவரது திருவடிகளை வணங்கி, தமக்கு மந்திரோபதேசம் செய்யம்படி வேண்டினார். ்
இவரது மந்திரபோதேச வேட்கையைக் கண்டு, இவ்வாலயத்து பிரகாரத்தில், வகுள மரத்தின் கீழ் அவருக்கு, ்
பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரங்களையும் போதித்தார். இதனால் இத்தலம் த்வயம் விளைந்த ஷேத்ரம் ்
எனப்படுகிறது.
ஆவணிமாத சுக்ல பஞ்சமியில் இந்நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர். ராமாநுஜர் வெள்ளாடை தரித்து ்
கிரஹஸ்தராய் காட்சி அளிப்பது இந்த ஸ்தலத்தில் தான்.
அபிமான ஸ்தலம்