கஜப்பிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட மாடக்கோவில். பலாசவனம் என்றால் புரசுமரக் காடு எனப் பொருள். இத்தலத்து இறைவனை ஆபஸ்தம்ப மகரிஷி வழிபட்டுள்ளார். சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தருளிய புராணத்துடன் சம்பந்தப்பட்ட கோவில்.
முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனும், வேத சாஸ்திரங்களில் விற்பன்னனுமான புகழ் பெற்ற பிரமாதிராஜன் என்ற ஞானமூர்த்தி பிறந்த ஊர்.
ஆதியில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட ஊரை, தமிழில் நால்வேதியூர் என அழைத்தார்களாம். பின்னர் நாளடைவில் மருவி நாலூர் என்றானதாம்.
தேவாரத் திருத்தலம் - மாடக்கோவில்