வாணாசுரன் என்னும் அசுரராஜனின் படைத்தளபதிகளான ஓணன், காந்தன் இருவரும் சிவபக்தர்கள். பக்தி ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள். இவ்விருவரும் காஞ்சி வந்து தீர்த்தம் அமைத்து அதன் கரையில் தனித்தனி சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டு வந்தனர். இதனால் மகிழ்ந்து பிரத்யட்சமானார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஓணன் மற்றும் காந்தன் வழிபட்டதால் இவ்வூர் ஓணகாந்தன்தளி எனப் பெயர் கொண்டது.
இவ்விறைவனை வழிபடுபவர்களுக்கு மெய்ஞானம், முக்தி அருள வேண்டியும், இங்கேயே தங்கியருள வேண்டும் என்றும், தங்களுக்கு பிரத்யட்சமான இறைவனிடம் கோரினர்.
சுந்தரர் கேலி செய்து பதிகம் பாடியதால், அங்கும் தொடர்ந்து சென்று "நெய்யும் பாலும்" எனும் திருப்பதிகம் பாடியதால், அம்மரத்து காய்களையே பொன் காய்களாக விழுமாறு அவற்றை சுந்தரர் பெற்றார் என்றும் செவி வழிக்கதை வழக்கத்தில் உள்ளது.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.