சந்திரன் மஹாவிஷ்ணுவைக் குறித்து ராஜசூய யாகம் செய்தான். யாகத்திற்கு அனைவரும் வந்திருந்தனர். யாகத்திற்கு வந்த பிரஹஸ்பதியின் மனைவி தாரை மீது சந்திரன் மோகம் கொண்டான். இந்த தகாத செயலுக்காக பிரஹஸ்பதியின் சாபம் பெற்று குஷ்ட நோயால் அவதியுற்றான். தவிர, தட்சனின் சாபம் கொண்டதால் தேயத் தொடங்கினான்.
இவ்விரு சாபங்களிலிருந்தும் விடுபட சந்திரன் ஸ்ரீரங்கம் சென்று கைங்கர்யம் செய்தான். பின்னர் திரு இந்தளூர் சென்று பரிமள ரங்கநாதரை வழிபட்டான். மூன்றாவதாக, திருத்தலைச்சங்க நாண்மதியம் வந்து பெருமாளைச் சேவித்து, சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
ராமாநுஜதாஸர் என்பவரின் முயற்சியால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, தாயார் சந்நிதியும் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.