அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில் (திருத்தலைச்சங்க நாண்மதியம்)

Primary Deity
மூலவர்: நாண்மதியப் பெருமாள்் உற்சவர்: வெண் சுடர் பிரான் (வ்யோம ஜோதி பிரான்)
Temple Type
108 திவ்ய தேசம்
Location
பெரம்பலூர்
Contact Number
+91-Not Available

சந்திரன் மஹாவிஷ்ணுவைக் குறித்து ராஜசூய யாகம் செய்தான். யாகத்திற்கு அனைவரும் வந்திருந்தனர். யாகத்திற்கு வந்த பிரஹஸ்பதியின் மனைவி தாரை மீது சந்திரன் மோகம் கொண்டான். இந்த தகாத செயலுக்காக பிரஹஸ்பதியின் சாபம் பெற்று குஷ்ட நோயால் அவதியுற்றான். தவிர, தட்சனின் சாபம் கொண்டதால் தேயத் தொடங்கினான்.

இவ்விரு சாபங்களிலிருந்தும் விடுபட சந்திரன் ஸ்ரீரங்கம் சென்று கைங்கர்யம் செய்தான். பின்னர் திரு இந்தளூர் சென்று பரிமள ரங்கநாதரை வழிபட்டான். மூன்றாவதாக, திருத்தலைச்சங்க நாண்மதியம் வந்து பெருமாளைச் சேவித்து, சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ராமாநுஜதாஸர் என்பவரின் முயற்சியால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, தாயார் சந்நிதியும் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.

மூலவர்: நாண்மதியப் பெருமாள்் உற்சவர்: வெண் சுடர் பிரான் (வ்யோம ஜோதி பிரான்).

தாயார்: தலைச்சங்க நாச்சியார்் உற்சவ தாயார்: செங்கமலவல்லி.

மூலஸ்தானத்தில் நாண்மதியப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சந்திர சாப ஹரன் என்றொரு திருநாமம். தலையில் சந்திரனைச் சூடியுள்ளார். சாய்மானமாகப் பெரிய சங்கு ஒன்று உள்ளது.

உற்சவப் பெருமாள் வெண் சுடர் பிரான், உற்சவத் தாயார் செங்கமலவல்லி ஆகியோரின் விக்ரஹங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இங்குள்ள ஆண்டாள் விக்ரஹம் சிறியதாக இருந்தாலும் எழிலான தோற்றம் கொண்டுள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...