பராசுரன் எனும் அசுரன் இத்தலத்தில் நந்தியையும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகளையெல்லாம் இம்சிக்கும் பழக்கம் உள்ளவன். திருமால் கதாயுதம் ஒன்றைப் பெற்று அவனை அழித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
வில்வ மரத்தடியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை இவ்வூர் அரசன் வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினான் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.