நாக இன மக்களால் உருவாக்கப்பட்டு சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில். நாக கன்னியர்கள், நாகலோகத்திலிருந்து இங்கு வந்து இவ்விறைவனை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு பூஜித்துள்ளனர்.
சாரமாமுனிவர் வழிபட்ட இறைவன்.
இங்கு தவமிருந்த மட்டுவார்குழலி இத்தலத்திலுள்ள சிவகெங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடி, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்க மூர்த்தத்தை வழிபட்டாள் என ஸ்தல வரலாறு. மலைக்கோவில் அம்பிகை மட்டுவார்குழலி இங்கு தவமிருந்ததை, சித்திரைத் திருவிழாவின் 6ஆம் நாள், ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர்.
விஜயதசமியன்று மலைக்கோவில் சிராமலைநாதர் இங்கு வந்து அம்பு போட்டு விட்டு திரும்பி செல்வார்.