'சிந்து' என்றால் எலும்பு எனப் பொருள். இத்தலத்து படித்துறையில் வைக்கப்பட்ட எலும்பே பூவாக மாறியது.
தேன் திவலைகளை சிந்தும் பூக்களையுடைய துறை என்பதால் சிந்துபூந்துறை எனப்படுகிறது.
சிந்துபூந்துறையிலிருந்து நெல்லையப்பருக்கு அபிஷேக நீர் எடுத்துச் செல்வார்கள். மேற்குக் கரையில்
நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் தைப்பூச மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தையொட்டி கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயத்தில் கைலாசநாதரும்
சௌந்தரவல்லியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.