மார்க்கண்டேய மகரிஷியின் மூலமாக இத்தலத்தின் பெருமைகளை கேள்வியுற்ற திருமகள், திருமாலை விட்டு
என்றும் பிரியாதிருக்கும் வரத்தைப் பெற, இத்தலத்திலுள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டாள்.
தவத்தில் மகிழ்ந்து பிரத்யக்ஷமான திருமால், லட்சுமி கோரிய வரத்தை அருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருமகளிடமிருந்து வெளிப்பட்ட இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய மூன்று சுவாச நாளங்களின் சக்தியால்
திரிதள வில்வம் தோன்றியதாக ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
பிதுர்கடன்களை ஒழுங்காக செய்யாதவர்கள், லட்சுமி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்தால், பித்ரு
தோஷங்கள் நீங்கி, சந்ததி விருத்திக்கு ஆசி கிடைக்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும், மகப்பேறு உண்டாகும்.