இவ்வூரின் காவல் தெய்வமான அய்யனார், சுற்றுவட்டார பல கிராமங்களுக்கு குலதெய்வமாகப் போற்றப்படுகின்றார்.
ஊரின் காவல் தெய்வமான இவர் நடு இரவில் ஊரை வலம் வரும் ஓசை கேட்பதாகக் கூறப்படுகிறது.
பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பல்லிகளின் சப்தங்கள் மூலமாக சம்மதம் அல்லது தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை.
கருவறைக்குள் பாம்புகள் சர்வ சாதாரணமாகச் சென்று வரும். மணியோசை கேட்டதும் வெளியேறுவதும் அன்றாட
நிகழ்வுகள்.
இவ்வூரிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சப்தமாதர்கள் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.