்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஜெய காளிகாம்பாள் எழுந்தருளியுள்ளார். சூலம், கட்டாரி, வில், கேடயம், நாகம், அசுரனின் தலை இவற்றைக் கொண்ட கரங்களுடனும், அபய - வரத ஹஸ்தங்களுடனும் அஷ்டபுஜ காளியாக தரிசனம் தருகின்றாள். கிழக்கு பார்த்த சந்நிதி. கோஷ்டத்தில் ப்ரத்யங்கிரா தேவி, தட்சிண காளி, மற்றும் அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிரகார வலச்சுற்றில் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் எழுந்தருளியுள்ளார். சம்ஹார பைரவர் - சண்டிகை, பீஷண பைரவர் - சாமுண்டி, உன்மத்த பைரவர் - வாராஹி, கபால பைரவர் - இந்த்ராணி, குரோதன பைரவர் - வைஷ்ணவி, சண்ட பைரவர் - கௌமாரி, குரு பைரவர் - மகேஸ்வரி, அசிதாங்க பைரவர் - ப்ராம்மி எனும் அஷ்ட பைரவர்களையும், அஷ்ட மாதர்களையும் காணலாம். அற்புதமான திருவுருவங்களாக உள்ளன. வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் ஜெயகாளிகாம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், பௌர்ணமி தினங்களில் யாகமும், ஆடி மாத பூர நட்சத்திரத்தன்று சண்டி ஹோமமும் சிறப்புற நடத்துகின்றனர். தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ மூர்த்தங்களுக்கு யாகமும் அபிஷேகமும் நடைபெறும். பைரவ யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வழக்கில் வெற்றி, கண் திருஷ்டி அகலுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.