மிளகுப் பொதிகளை ஏற்றிய வண்டியுடன் ராமேஸ்வரம் செல்லும் வியாபாரி ஒருவன், செல்லும் வழியில் இவ்வூர் சுங்கச்சாவடியில், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, பயறு மூட்டைகள் எனப் பொய்யுரைத்தான். பயறு மூட்டைகளுக்கான குறைந்த வரியை கோவிலுக்கு செலுத்திவிட்டு, சிறிது தூரம் பயணித்துவிட்டு, மூட்டைகளைப் பார்த்தால் அத்தனையும் பயறு மூட்டைகளாகவே இருந்தன.
பொய்யுரைத்ததால் ஏற்பட்ட விளைவுகளுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டினான். தினமும் அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு மிளகு அன்னம் செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக வேண்டிக்கொண்டான்.
பயறு மூட்டைகள் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின.
(பைங்கா நாடு - மன்னார்குடிக்கு தெற்கே 6 கி.மீ தூரத்தில் சபாபதீஸ்வரர் கோவில் உள்ளது.)