ஸ்ரீ ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை கட்டப்பட்ட இடம். லக்ஷ்மணனை லவ-குசர்கள் தோற்கடித்த இடம்.
ஸ்ரீ ராமபிரானின் புத்திரர்களான லவ-குச சிறுவர்கள், தங்களது தந்தை எனத் தெரியாமல் அவருடன் போரிட்டதால், 'சிறுவர் அம்பு எடும்' என்பது 'சிறுவரெம்பெடு' எனப் பெயர் கொண்ட ஊர். தற்போது 'சின்னம்பேடு' எனப்படுகிறது.
'பேடு' என்றால் அம்பு வைக்கும் கூடை என்று அர்த்தம். இதனால் 'சின்னம்பேடு' என்றானது.
அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி தந்த ஸ்தலம். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய ஸ்தலம்.
முருகனை மகிழம்பூவினால் அர்ச்சித்து, மகிழம்பூ மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். பச்சை கற்பூர அபிஷேகம், தேன் கலந்த தினை மாவு விளக்கு, கடலைப்பருப்பு பாயாச நைவேத்யம், நெய் அல்லது இலுப்பை எண்ணெய் விளக்கு, சிகப்பு அல்லது பச்சை வஸ்திரம் அணிவித்தல் ஆகிய வழிபாடுகள் முருகனுக்கு உகந்தவை என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
பூரம், உத்திரம், விசாகம் நட்சத்திர தினங்களிலும், பௌர்ணமி, சுக்ல த்விதியை, சுக்ல சஷ்டி நாட்களிலும், செவ்வாய், வியாழன், வெள்ளி தினங்களிலும் முருகனுக்கு விசேஷம் என அர்ச்சகர் மேலும் தெரிவிக்கின்றார்.