இலுப்பைக்காடாக இருந்த இப்பிரதேசம், அமைதியாக இருந்தபடியால், முனிவர்கள் பலர் இங்கு தங்கி, யாகங்கள் பல நடத்தினமையால், இவ்வூர் யாகசாலை எனப் பெயர் கொண்டு பின்னர் காலப்போக்கில் பாகசாலை என மருவியது.
நாரதர் கொண்டு வந்த மாங்கனியைப் பெற, உலகை வலம் வர வேண்டி, முருகன் புறப்படுகையில், மந்திர சக்தியே மயில் உருவமெடுத்து வந்தது. அந்த மந்திர மயிலை வாகனமாகக் கொண்டுள்ள ஒரே ஸ்தலம் இது.
(சூரபத்மனுடன் போர் புரிகையில், இந்திரனே மயில் வடிவம் கொண்டு, வாகனமாக வந்து தாங்கிக் கொண்டதை - இந்திர மயில் என்பர். போரில் சூரபத்மனை வென்று - அவனைப் பிளந்து, மயிலாகவும், சேவலாகவும் ஏற்றுக் கொண்டார். இதனைச் சூரமயில் என்பர்.)