இவ்வாலயம், தேவாரக் காலத்தில் தென் பரம்பைக்குடியில் இருந்ததாம். இப்போது ஆலயம் உள்ள இடம் தனி ஊராக விளங்குகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் இவ்விறைவனை தரிசித்துவிட்டு, இவ்வூர் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், "மழபாடி வர மறந்தனையோ?" எனக் கேட்டு மறைந்தார். உடனே கண் விழித்துக் கொண்ட சுந்தரர், காவிரியின் அக்கரையிலுள்ள மழபாடி எனும் ஊருக்குச் சென்று, அங்குள்ள இறைவனை தரிசித்து, "பொன்னார் மேனியனே" எனும் பதிகத்தைப் பாடினார்.
தேவாரத் திருத்தலம்.