ஆதிகயிலை, ஜோதிவனம், சிவஞானபுரம், யோகவனம், சதுர்வேதமங்கலம், சிவபுரம், உபதேசபுரம் ஆகிய பெயர்களை
உடைய ஸ்தலம். சிவானந்தம் எனும் பேராற்றில் இறங்கி உயிர்கள் இன்பம் பெரும் ஸ்தலம் என்பதால் பெருந்துறை ்
எனப்படுகிறது.
சோழ நாட்டு கடற்கரையில் நிறைய குதிரைகள் வந்திறங்கி உள்ளதாக கேட்டறிந்த அரிமர்த்தன பாண்டியன், தனது
அமைச்சரான திருவாதவு+ராரை அழைத்து உயர்ரக குதிரைகளை வாங்கி வருமாறு பணித்தான். நாற்பத்தொன்பது ்
கோடி பொன் கொடுத்து தரமான குதிரைகளை வாங்கி வரச் சொன்னான் பாண்டியன். பொன்னைப் பெற்றுக் ்
கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்ட அமைச்சர் திருப்பெருந்துறை எனப்படும் இவ்வு+ரை வந்தடைந்தார்.
கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், ஞானதேசிகரான வடிவம் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்தார். ்
நந்தியம்பெருமானும் மானிட வடிவத்தில் பின் தொடர்ந்தார்.
திருப்பெருந்துறையில் ஓய்வெடுக்க தங்கிய அமைச்சர் திருவாதவு+ராரின்் செவிகளை இனிமையான சாமகானம் ்
எட்டியது. ஆவல்மேலிட்டு, கானம் வந்த இடத்தை நோக்கி சென்ற அமைச்சர், அங்கு ஜடாமுடியுடன் கூடிய துறவி ்
ஒருவர் கையில் ஏடுகளுடன், குருந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு சாமகானத்தை பாடிக் கொண்டிருந்ததை ்
கண்டார். துறவியின் எதிரில் பல சீடர்கள் பவ்யமாக உட்கார்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
துறவியின் கையிலுள்ள ஏடுகள் என்ன என்று அமைச்சர் வினவ சிவஞானபோதம் எனும் நூல் என பதில் வந்தது. ்
துறவியின் மீது பக்தி கொண்ட அமைச்சர், அவரை பணிந்து தம்மை பிறவித் தளையிலிருந்து நீக்குமாறும் முக்தி
பெற அருளுமாறும் வேண்டினார். தம்மை இன்னாரென்று அறிவித்துக் கொண்ட துறவி, குருவாக இருந்து ்
அமைச்சருக்கு உபதேசம் செய்தார். குருநாதர், திருவாதவு+ராருக்கு தீட்சா நாமமாக மாணிக்கவாசகர் எனும் ்
பெயரைச் சூட்டி, தனது திருவடிகளை அவர் தலை மீது வைத்து திருவடி தீட்சையும் செய்தருளினார் என வரலாறு.
மன்னனிடமிருந்து குதிரைகள் வாங்க எடுத்த வந்த பொன் அவ்வளவையும், இவ்வு+ர் ஆலயம் கட்ட செலவழித்து ்
விட்டார் அமைச்சர். இதனை அறிந்து கொண்ட அரிமர்த்தன பாண்டியன், குதிரைகளை சீக்கிரமாக அனுப்புமாறு ்
தகவல் அனுப்பினான். ஆவணி மூலத்தன்று குதிரைகளை அனுப்பி வைப்பதாக கூறுமாறு சிவபெருமான் பணித்தார்.
செய்தி கேட்டறிந்த மன்னன், படையாட்களின் மூலமாக நடந்த விஷயங்களையும் தெரிந்து கொண்டதால், வாதவு+ராரை ்
சிறைப் பிடித்து வருமாறு தண்டநாயகர்களை அனுப்பினான். மன்னனின் உத்திரவின்படி திருவதவு+ரார் சிறைப்பட்டு ்
துன்பங்களை அனுபவிக்கலானார்.
தனது துயர் துடைக்க சிவபெருமான வேண்டி நின்றார். சிவபெருமான் தனது சிலம்போசையை மாணிக்கவாசகருக்கு ்
கேட்கும்படி செய்தார். பு+த கணங்களை சேவகர்களாக்கி, தானும் குதிரை சேவகனாக மாறி, காட்டிலுள்ள நரிகளை ்
ஒன்று திரட்டி, பரிகளாக்க (குதிரைகளாக) மாற்றி, பாண்டியனிடம் கொண்டு சென்றார். அஸ்வ சாஸ்திர நிபுணர்கள்
வந்து பாண்டியனிடம் குதிரைகள் மிகவும் உயர்ரகமானவை என்று கூறினார்கள். குதிரை சேவகனாக வந்த சிவன்
கயிறு மாற்றி அரச சேவகர்களிடம் குதிரைகளை தந்துவிட்டு சென்றதும் பரிகளெல்லாம் மீண்டும் நரிகளாக மாறின. ்
மீண்டும் தண்டனைக்குள்ளான அமைச்சரை மீண்டும் காப்பாற்றினார் இறைவன் என வரலாறு நீளுகிறது.
(இதைத் தொடர்ந்து பிட்டடிற்கு மண் சுமந்த படலம்)
திருப்பெருந்துறை கோவிலை தனதுடைமையாக்கி கொள்ள நினைத்த லுண்டாக்கன் எனும் அமைச்சர் இங்கிருந்த ்
முன்னூற்றுவர்களை அடித்து விரட்டி விட்டு ஆக்ரமித்துக் கொண்டான். முன்னூற்றுவர்களுக்கு உதவ வேண்டி, ்
ஆத்மநாதர் ஒரு வயோதிக அந்தணண் வேஷம் கொண்டு பரமசுவாமி எனக் கூறிக் கொண்டு வந்து அரசனிடம் ்
சென்று லுண்டாக்கனின் ஏமாற்று வேலையை பற்றித் தெரிவித்தார். இது எங்கள் நிலம் என்பதற்கு சாட்சியாக பு+மியில் ்
ஒரு வெட்டு வெட்டினால் தண்ணீர் வரும் என்றார். இதை மறுத்த லுண்டாக்கன் காட்டிய இடமெல்லாம் தோண்டிப் ்
பார்த்ததில் தண்ணீர் வெளிப்பட்டது. ஒரு யோசனை சதுர வட்டத்திற்குள் 66 கோடி தீர்த்தங்களை வரவழைத்தார் ்
பரமசுவாமி என ஸ்தல வரலாறு.
மன்னனுக்கே இக்கோவிலின் மீது பக்தி வந்துவிட்டது .பல திருப்பணிகளை செய்துள்ளான். காசியிலிருந்து 300 ்
அர்ச்சகர்களை வரவழைத்து இங்கு குடியமர்த்தி அவர்களை இறைத் தொண்டை ஏற்குமாறு பணித்தான். அவர்களை ்
கௌரவிக்க தங்க கங்கணம் வாங்கியளித்தான். கங்கணத்தில் ஒன்று மிஞ்சிவிடவே ஒரு வயோதிக அர்ச்சகரை ்
தேடிப்பிடித்து கட்டி விட்டான் எனவும், மறுநாள் ஆத்மநாதரை தரிசிக்க சென்றபோது அவரது ஆவுடையில் இந்த ்
கங்கணம் கட்டப்பட்டிருந்து கண்டு மகிழ்ந்தான் எனவும் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
அர்ச்சகர் வீட்டுக் குழந்தைகளுக்கு வேத சாஸ்திரம் சொல்லிக் கொடுக்க, இறைவனே முதியவர் வடிவில் வந்தார் ்
என்றும் சம்பளமாக புழுங்கலரிசி சாதம், கீரைக் கூட்டு, பாகற்காய் ஆகியன பெற்றார் எனவும் கூறப்படுகிறது. ்
இதனால் ஸ்வாமிக்கு இவற்றை நைவைத்யம் செய்வதோடல்லாமல், ஆலயத்தை சுற்றியுள்ள வீடுகளிலும் உணவு ்
விடுதிகளிலும் இவற்றையே சாப்பிடுகின்றனர்.
ஆனித்திருமஞ்சன விழா - உத்திர நாளை கடை நாளாக கொண்டு, கொண்டாடும் பெருவிழா 10 நாட்களுக்கு ்
ப்ரம்மோத்ஸவம். பக்தோத்வஸம் என்பர். ஆனி உத்திர நட்சத்ர நன்னாளில் திருவாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும். ்
சிவ பெருமானிடம் மாணிக்கவாசகர்உபதேசம் பெறும் நிகழ்ச்சி நடபெறும். ஆனி மகத்தில் தேரோட்டம் நடைபெறும் .
ஆவணி மூல விழா - சிவபெருமான், பாண்டியனிடம் கயிறு மாற்றிக் கொண்டு குதிரைகளை விற்கும் விழா .
கார்த்திகை தீப விழா - சுளுந்து தீபாராதனை அல்லது அக்னி அபிஷேகம்  ்- எரியாடல்.
மார்கழித் திருவிழா - திருவாதிரையைக் கடை நாளாகக் கொண்டு, கொண்டாடும் பெருவிழா.
மார்கழி திருவிழா 10 நாட்கள், விழாவின்போது - 4ம் நாள் திரிபுரமெரித்தது, 6ம் நாள் ஊர்த்துவ தாண்டவமாடியது, ்
7ம் நாள் பிட்டிற்கு மண் சுமந்தது, 8ம் நாள் எல்லாம் வல்ல சித்தராய் வந்தது, பாண்டிய மன்னனிடம் குதிரை ்
சேவகனாக வந்தது - ஆகிய அலங்காரங்களில் மாணிக்கவாசகரை பவனி வர செய்கின்றனர்.