மலர்களின் தேன் ஒழுகப் பெற்று, பழச்சாறுடன் கலந்து, கழனிகளில் கரும்புச்சாற்றுடன் கலந்து ஓடியதால் கஞ்சாறு ்
எனப் பெயர் கொண்டு, பின்னர் மருவி கஞ்சனூர் என்றானது. போஜராஜனின் வம்சத்தில் வந்த கம்ஸன் என்ற அரசன் ்
தகாத நடத்தையினால், உடல் நலம் கெட்டு, சுக்ரனின் உபதேசப்படி இத்தலம் வந்து, இவ்விறைவனை வழிபட்டு உடல் ்
நலம் பெற்றான். இதனால் இவ்வு+ர் கம்ஸபுரம் எனப்  ்பெயருற்று பின்னர் கஞ்சனூர் ஆனதாகவும் கூறுவர். ்
பார்வதி - பரமேஸ்வரர் திருமணக் கோலம் காண வேண்டி, ப்ரம்மன் இத்தலத்தில் தவமிருந்து கல்யாணக் கோலம் ்
காணப் பெற்றார். ப்ரம்மனுக்கு கஞ்சன் என்றொரு பெயர் இருப்பதால் இவ்வு+ர் கஞ்சனூர் என அழைக்கப்படுகிறது என்பர்.
அக்னி பகவான் இத்தலத்து மூலவரை வழிபட்டு பு+ஜித்த காரணத்தால் ஸ்வாமிக்கு அக்னீஸ்வரர் எனப் பெயர் வந்தது. ்
அக்னி தேவனின் சோகையை நீக்கியவர் அக்னீஸ்வரர்.
அசுரர்களின் குருவான சுக்ரன் கடுந்தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து, இறந்தவர்களை பிழைக்க வைக்கும் ்
சஞ்சீவினி மந்திரத்தை கற்றார். தேவாசுர யுத்தத்தின்போது இறந்த அசுரர்களை எல்லாம் பிழைக்க வைத்துக் ்
கொண்டிருந்ததால், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதை தடுக்க சிவபெருமான் சுக்ரனை ்
விழுங்கி வயிற்றுக்குள் சிறைப்படுத்தி விட்டார். பின்னர் சுக்ரன் மீது கருணை கொண்ட பார்வதி தேவி, ்
சிவபெருமானிடம் சுக்ரனை விடுவிக்க கோரினார். பின்னர் சுக்ரன் கிரக பதவியையும் பெற்றான். இதனால் ்
இத்தலத்தில் அக்னீஸ்வரரையே சிவனாகவும் சுக்ரனாகவும் வழிபடுகின்றனர். நவகிரகங்களில் சுக்ரனுக்குரிய ்
ஸ்தலம். அன்னை பார்வதியை வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவோர்களை சுக்ரன் சந்தோஷமாக ஆசி ்
வழங்குகின்றான்.
இவ்வு+ரைச் சேர்ந்த ஹரதத்தர் எனும் வைணவர் விபு+தி பு+சி, ருத்ராட்சமணிந்து அக்னீசர் கோவிலிலுள்ள ்
தட்சிணாமூர்த்தி சிலையின் கீழ் நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். சிவனே பரம்பொருள் என்று இருப்பவர். ்
இறைவனின் தரிசனம் கண்டவர்.
ஒரு சமயம், வயசான விவசாயி ஒருவன், சுமந்து வந்த புல்கட்டின் பளு தாங்காமல், ஒரு வீட்டின் மதிற்சுவர் ்
மீது வைத்தான். புல் கட்டு உள்பக்கமாக விழுந்து, அங்கிருந்த கன்றுகுட்டி துரதிருஷ்ட வசமாக இறந்து ்
விட்டது. ஊர் மக்கள் ஒன்று கூடி விவசாயியை தண்டிக்கின்றனர்.  ்அப்போது அங்கு வந்த ஹரதத்தர், ்
விவசாயி பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறிக் கொண்டே இருப்பதால் அவனது பாவம் தொலைந்தது என்றார்.
அப்படியானால் கோவிலிலுள்ள கல்நந்தியை புல் சாப்பிட வைக்கட்டும் என்ற மக்கள் கேலி செய்தனர். ்
ஹரதத்தர் இறைவனை வேண்டிக் கொண்டிருக்க, விவசாயி பஞ்சாட்சர மந்திரம் கூறிக் கொண்டே, ்
புல் கட்டை கல் நந்திக்கு கொடுக்க, கல் நந்தியும் புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த ஸ்தலம்.
சிவபக்தன் ஒருவன் தன் வீட்டில் காய்த்த சுரைக்காயை இறைவனுக்காக விட்டு வைத்திருந்தான். ்
ஒரு நாள் சிவனடியார் ஒருவர் அவனது வீட்டிற்கு வந்து தனக்கு பசிக்கிறது எனக் கேட்டார். பக்தனின் ்
மனைவி சுரைக்காயை பறித்து சமைத்து போட்டு விட்டாள். இறைவனுக்காக வைத்திருந்ததை எடுத்து ்
விட்டாளே என மனைவி மீது கோபமாயிருந்தான் பக்தன். அவனது கனவில் தோன்றிய இறைவன் ்
அடியாராக வந்து சுரைக்காயை உண்டது தாமே என கூறினார். இந்த நிகழ்ச்சியை நினைவு+ட்டும் ்
வகையில், அக்னீசருக்கு அன்னாபிஷேகம் செய்யும்போது சுரைக்காயும் இடம் பெறுகிறது.
மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த ஸ்தலம். கலிக்காமரின் திருமணம் நடந்த ஸ்தலம். ்
பராசரரின் சித்தப்ரம்மை நோயை நீக்கியருளிய ஸ்தலம்.
தேவரா வைப்புத்தலம் -  ்நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று - சுக்கிரன் ஸ்தலம்