பத்து ஊர்களின் நிர்வாகத்தை இங்கிருந்தபடியே நடத்தினார்களாம். அதனால் பத்தூர் எனப் பெயர் பெற்று, பின்னர் மருவி பாதூர் ஆனதாக கூறுகின்றனர். எல்லைக்காவல் படை இங்கு தங்கியிருந்ததால் பாதூர் என பெயர் கொண்டதாகவும் கூறுகின்றனர். (பாது என்றால் காவல்)
சிவ அபராதம் விளைவித்த சுக்கிராச்சார்யார், அந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் தவமிருந்ததாக தல வரலாறு.
இதனால் சுக்ரதோஷம் நீங்கிட, இத்தலம் வந்து பரிகாரங்கள் செய்கின்றனர்.
இங்குள்ள பிரத்யங்கிரா தேவிக்கு பால், நெய் அபிஷேகம் செய்கின்றனர். அமாவாசைதோறும் மிளகாய் யாகம் நடத்துகின்றனர்.