கயைக்கு சமமாக ஓடும் பல்குனி ஆற்றில் குளித்துவிட்டு, இரட்டைப் பிள்ளையாரை பூஜித்து, பிதுர்தோஷம் நீங்கப் பெற்றார் துர்வாசர் என புராணக் குறிப்பொன்று கூறுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி நிற்பவர்கள் இரட்டைப் பிள்ளையாரை பிரார்த்திக்கின்றனர்.
யோக தட்சிணாமூர்த்தியாக இருந்த சிவபெருமான் மீது மன்மதன் மலர் அம்புகள் தொடுத்ததால் இவ்வூர் பூவாளூர் எனப் பெயர் கொண்டது. எழுபது முனிவர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழ் வேள்வி நடத்திய ஸ்தலம்.
குங்குமசுந்தரியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அநேகம். நோயுற்ற கணவன்மார்களுக்காக இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.