ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த அமிர்த கும்பத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தேங்காய் விழுந்து, லிங்கமாக தோன்றிய இடம் இது. நாளிகேர லிங்கம் என்றும் பலேசர் என்றும் திருநாமங்கள் உண்டு.
நவநதிகளும் நவகன்னிகைகளாக மகாமகக் குளத்திற்கு நீராட வந்தபோது, கிழக்கு முகமாக இருந்த லிங்கம் அவர்களுக்கு அருள் புரிவதற்காக, மேற்கு முகமாக திரும்பிக்கொண்டது.
'அபிமுக' எனும் சொல்லுக்கு 'எதிர் நோக்கி இருத்தல்' எனப் பொருள். தங்களுக்காக லிங்கம் திரும்பிக்கொண்டதால், அந்தப் பெயரிலேயே எழுந்தருளி தரிசனம் தருமாறு நவகன்னிகைகள் வேண்டினர் என்பது ஸ்தல வரலாறு.