பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும்போது, அசுரர்களும் தேவர்களும் மந்தார மலையை மத்தாகவும்,
வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி வலி பொறுக்க முடியாமல் கால கூடம் என்னும்
நஞ்சைக் கக்கியது. நஞ்சைக் கண்டு பயந்து தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு
உதவ வேண்டி சிவபெருமான் நஞ்சை விழுங்கினார். இதனால் பதறிய பார்வதி, நஞ்சு தொண்டைக்குள்
இறங்காமலிருக்க தொண்டையை அழுத்திப் பிடித்தாள். சிவபெருமான் அந்த நஞ்சைத் தொண்டையிலேயே
இருத்திவிட்டார். இதனால் 'மணிகண்டேஸ்வரர்' என்று திருநாமம் பெற்றார்.
சனி பகவான் ஈஸ்வரனை பூஜித்த ஸ்தலம்.