காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த உபரிசரவசு மன்னன், மதம் பிடித்த யானையை அழிக்க எய்த அம்பினால் பயந்து ஓடிய யானை, குளத்தருகே அனுஷ்டானங்கள் செய்து கொண்டிருந்த பிராம்மணனை மிதித்துக் கொன்றுவிட்டது. மீண்டும் அம்பெய்து யானையைக் கொன்றுவிட்டான் மன்னன். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள கடுந்தவம் மேற்கொண்டான் உபரிசரவசு. அவன் முன் தோன்றிய சிவபெருமான், "ஓம் பத்மநாபாய நம:" எனும் மந்திரத்தை ஆயிரம் முறை ஜபித்துக் கொண்டும், தினமும் பிராம்மணர்களுக்கு அன்னதானம் செய்து வருமாறும் கூறினார்.
திவ்ய ஞானத்தை கொடுத்ததால், திவ்ய ஞானேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவற்றை செய்து முடித்த உபரிசிரவசு, சித்தாச்ரமத்தில் சித்தேஸ்வரருக்கு ஆலயம் ஒன்றை எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிப்பிலுள்ளது. தேவார வைப்புத்தலம்.