வீற்றிருந்த கோலத்தில் பெருமாளை தரிசிக்க ஆவல் கொண்ட நாரதரின் விருப்பத்தை நிறைவேற்ற, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் பிரத்யட்சம் ஆனதாகவும், இதே கோலத்தில் இங்கேயே எழுந்தருள வேண்டி கோரிய நாரதரிடம், பக்தன் ஒருவனுடைய கனவில் தோன்றி, "இந்த ரூபத்தை சிலா வடிவமாக வடிக்கச் சொல்கிறேன்" என்று கூறியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
நல்ல விளைச்சல் கண்டால் பெருமாளுக்கு நெல் சமர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொண்ட பக்தன் ஒருவன், மனம் மாறி, வேண்டுதலை நிறைவேற்றவில்லை. அவன் வைத்திருந்த நெல்மணிகள் அனைத்தும் நெல்மலையாக மாறின. தவறை உணர்ந்து பக்தன் மன்னித்தருள வேண்டியதால், விரல் இடுக்கில் நெல் வைத்துக் கொண்டு காட்சி தந்ததாக ஸ்தல வரலாறு.
நெல்மலை என்பதே நாளடைவில் மருவி நெமிலி என்றானதாக கூறுகின்றனர்.