குருடிமலை, பாலமலை, பொன்னூத்து மலை ஆகிய மலைகளிலிருந்து ஓடி வரும் நீர், இரண்டு ஓடைகளாகப் பிரிந்து ஓடி வரும். இதனால் 'இருகரை' எனப் பெயருற்று, பின்னாளில் 'இடிந்தகரை' என்றானது. கரிகால மன்னன், மன வேதனையிலிருந்து விடுபட வேண்டி பல கோவில்களைக் கட்டினான். இருகூரிலுள்ள காட்டைத் திருத்தி அமைத்து, அங்கு வில்லிதுர்க்கை எனும் பத்ரகாளி கோவிலைக் கட்டினான். காட்டை அழிக்கும் பணியில் ஸ்ரீ ராமபிரான் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வேட்டையாடும் சமூகத்தினர் வழிபட்ட இறைவன் என்பதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அருள்மிகு ஸ்ரீ வில்லீஸ்வரர் திருக்கோவில் (இடிகரை)
மூலவர்: ஸ்ரீ வில்லீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ வேத நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வில்லீஸ்வரர். நெற்றியில் மூன்று நேர்க்கோடுகள் காணப்படுகின்றன. ஆவணி மாதம் 14, 15, 16 ஆகிய தினங்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி. மகா மண்டபத்தில் மூல விநாயகர் கிழக்கு நோக்கி எழுந்தருளி ஆசி வழங்குகிறார். கனகசபை அதி அற்புதமானது. மூலவரை நோக்கியுள்ள பிரதோஷ நந்தியையும் விஷ்ணு துர்க்கையையும் தரிசனம் செய்யலாம். அடுத்துள்ள தனி சந்நிதியில் ஸ்ரீ பாலசுப்ரமண்யரின் எழில் வடிவத்தை காணலாம். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்ரீ வேத நாயகி அன்னை தனிக் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அமர்ந்த கோலத்தில் சௌந்தர்யமாக காட்சி தருகின்றாள். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்வாமி - அம்பாள் - முருகன் ஆகிய மூவரும் ஒரே வரிசையில் கிழக்குப் பார்த்து எழுந்தருளியிருப்பது சோமாஸ்கந்த அமைப்பு என்பார்கள். தீப ஸ்தம்பத்தில் கணபதி, முருகன், வேல், பசுபதீஸ்வரர் ஆகிய திருவுருவங்களைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.