்
 ்
 ்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. சாந்தமே உருவாக, அலங்கார பூஷிதையாக, நகரின் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். அருகேயுள்ள மாவடியான் சுவாமி அம்மனின் சகோதரன். நகரை காக்கும் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ளார். திருவீதி உலா வரும்போது இருவரும் சேர்ந்தே புறப்படுகின்றனர். வைகாசியில் கம்பம் போடும் விழா பிரசித்தம் - 21 நாட்கள். மூன்று கிளைகளுள்ள வேப்பமரத்தின் பட்டைகளை உரித்து மஞ்சள் பூசி அமராவதி ஆற்றில் திருமஞ்சனம் செய்வித்து பலி பீடத்தருகே நட்டு பூஜிப்பர். இதனை மஞ்சள் நீர்க்கம்பம் என்பர். தயிர்சாத படையல் விசேஷம். ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் சந்தனக் காப்பு, ஆடிப்பெருக்கன்று சாகம்பரி அலங்காரம் ஆகிய விசேஷ அலங்காரங்கள் செய்கின்றனர். பூச்சொரிதல் விழாவில் அம்மனுக்கு உகந்த அரளி, தாமரை, மருவு போன்ற மலர்களை பக்தர்கள் எடுத்துக்கொண்டு வருவார்கள். தான்தோன்றி கிராமத்திலிருந்து பிடிமண் எடுத்து வரச்செய்து இங்கு ஸ்தாபிதம் செய்து கோவில் எழுப்பியதாக குறிப்பொன்று கூறுகிறது.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.