வீரபாண்டியன் - சுந்தரவல்லி தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி இவ்விறைவனிடம் பிரார்த்தித்தனர்.
சுந்தரவல்லி தான் பார்க்கும் குழந்தைகளை எல்லாம் கொஞ்சி விளையாடி, ஒரே மாதிரி அன்பு செலுத்தி வந்தாள்.
ஆண் குழந்தைக்கு பெண் உடையும், பெண் குழந்தைக்கு ஆண் உடையும் அணிவித்து அழகு பார்ப்பாள். இதே போன்ற எண்ணத்தில் வரதராஜப் பெருமாளுக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்தும், புஷ்பவனநாதருக்கு துளசி அலங்காரமும் செய்து மகிழ்ந்தாள்.
இறைவனருளால் கோரிய வரம் கிடைக்கப் பெற்றாள். இதை நினைவு கூறும் வகையில் இன்றளவும் பெருமாளுக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்கின்றனர்.