ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தையும், சமாதி குடியிருந்த குகையையும் தரிசிக்கலாம்.
புண்ணாக்கு சித்தர் எனும் மஹான் இங்கு சமாதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நயன மலையில் சாப விமோசனம் பெற்ற சந்திரன் இவ்வுரை ஏற்படுத்தி சோமபுரி எனப் பெயரிட்டு சோமேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான். விஸ்வாமித்ரர் இங்கு ஆலயம் ஒன்றை நிர்மாணித்து லட்சுமி நாராயணரையும், பெருந்தேவி தாயாரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ ராமர் இவ்வழியாக வனவாசம் சென்றதாக குறிப்பொன்று கூறுகிறது. சப்தரிஷிகள், தேவேந்திரன், பாண்டவர்கள் ஆகியோர் இவ்வுருக்கு வந்ததால் சேர்ந்தபுரி எனப் பெயருற்று நாளடைவில் சேந்தமங்கலம் எனப் பெயர் கொண்டது.
இவ்வுரின் பேருந்து நிலையமருகே உள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணர், பெருந்தேவி தாயாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். (சௌந்தரராஜ பட்டர் - 94434 99854)