படையெடுப்பின்போது சேதப்படுத்தப்பட்டு வெகு காலத்திற்கு வழிபாடு இல்லாமல் இருந்த விக்ரகங்களை நாகம் ஒன்று காவல் காத்ததாகவும், புனர் நிர்மாணம் செய்யும்போது, மூலவருக்கு அடியிலுள்ள பீடத்தில் சக்தி வாய்ந்த மந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுக்கிரன் களத்திரத்தில் இருந்தாலோ நீச்சம் பெற்றிருந்தாலோ இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டு, ஒரு மண்டலம் நெய்தீபம் ஏற்றி, திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.