ஜலந்திரனை வதைத்த சக்கரத்தை,  ்சிவபெருமானிடமிருந்து பெற வேண்டி, திருமால் 16 சிங்கங்கள் தாங்குகின்ற ்
விண்ணிழி விமானம் கொண்டு வந்து அதில் சிவபெருமானை எழுந்தருள வேண்டினார். இங்கு தடாகம்  ்ஒன்றினை ்
ஏற்படுத்தினார். அதில் செந்தாமரை மலர்களை தோற்றுவித்தார்..
தினந்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார். ஒரு நாள் பு+ஜையின்போது, ஆயிரம் ்
மலர்களில் ஒன்று குறைந்து 999 மலர்களே இருந்தன. உடனே தனது வலக் கண்ணைப் பறித்து அதையே மலராக ்
கருதி பு+ஜையை முடித்தார். பிரத்யட்சமான சிவபெருமான் அவர் கோரிய சக்கரத்தை தந்தருளினார் என ஸ்தல ்
வரலாறு.
காத்யாயன முனிவரும் அவரது மனைவி சுமங்கலையும் இத்தலத்தில் தவச்சாலை ஒன்றினை அமைத்து ்
ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு நித்ய பு+ஜைகள் செய்து வந்தனர். நெடுங்காலமாக புத்திரப்பேறு ்
வாய்க்காததால் வேள்வி ஒன்றை மேற்கொண்டனர். யாகத்தீயில் அன்னப்பு+ரணியாகத் தோன்றிய ்
அம்பிகையிடம் புத்ர பாக்ய வரம் கேட்டனர்.
அம்பிகையே மகளாகப் பிறந்து - வளர்ந்து, சிவபெருமானை மணம் முடிக்க வேண்டும் என்ற வரத்தை ்
கேட்டுப் பெற்றனர். ஒரு நாள் குளத்தில் நீலோற்பல மலரில் அழகிய பெண் குழந்தை ஒன்று இருப்பதை ்
ரிஷிபத்தினி கண்டாள். உமையவளின் வடிவமே அந்த குழந்தை என அறிந்து கொண்டு, மகிழ்ந்தாள். ்
காத்யாயினி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
அந்த பெண் குழந்தை வளர்ந்து பெரியவளானதும், அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு, சிவனை ்
வேண்டினர். சித்திரை மக நாளில் மணப்பதாக கூறுகிறார் சிவபெருமான். மாப்பிள்ளைசாமியாக வந்து
நின்றவர் சிவபெருமான்தானா என்ற சந்தேகம் முனிவருக்கு வந்தது. ்
திருமால் தன்னை பு+ஜித்த கண்மலரையும், மிழலைக் குறும்பர் நைவைத்யம் செய்த விளாம்பழத்தையும் ்
தனது திருவடிகளருகே காண்பித்தார் மாப்பிள்ளைசாமி. முனிவரின் சந்தேகம் தீர்ந்தது. திருமணமும் ்
இனிதே நடந்தேறியது. மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்தரை என கல்யாணத்தில்் நடக்கும் அனைத்து
நிகழ்வுகளும் நடந்தேறின.
நாட்டில் கொடிய பஞ்சம் தலை விரித்தாடியபோது, பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, வருந்திய ்
அப்பரும் ,சம்பந்தரும் இவ்விறைவனைப் பாடி பொற்காசுகள் பெற்று, அதில் பொருட்களை வாங்்கி ்
சமைத்து, அனைவர்க்கும் சோறிட்டார்கள். சமயக்குரவர்களான அப்பரும் சம்பந்தரும் இங்கே மடங்கள்
அமைத்துள்ளனர்.
இறைவனின் கட்டளைப்படி, இவர்கள் இருவருக்கும் தினந்தோறும் படிக்காசு தந்த விநாயகர் மேற்கு ்
பீடத்தருகே அமர்ந்துள்ளார். ஆதலால் இவருக்கு படிக்காசு விநாயகர் என்று பெயர் வந்தது.
தேஜினிவனம் என்றால் வீழிச்செடிக்காடு எனப் பொருள். வீழிச்செடிகள் நிறைந்திருந்த பகுதியாக  ்
இருந்ததால் இவ்வு+ர் திருவீழிமழலை எனப் பெயர் கொண்டது. ஸ்தல விருட்சம் வீழி மரமாக இருப்பினும் ்
தற்போது இருப்பது பலாமரமே.
மிழலைக்குறும்பர் எனும் வேடுவர் தினமும் இறைவனுக்கு விளாம்பழ நைவைத்யம் செய்வார். அவரது ்
அன்பான வழிபாட்டை மெச்சி இறைவன் மிழலைக்குறும்பருக்கு அஷ்டமா சித்திகளை அருளினார் ்
எனக் கூறப்படுகிறது.
ஓவ்வொரு வருஷமும் சித்திரை மாசத்தில் கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. பெருவிழாவின் 2ம் நாள் ்
திருமுலைப்பால் உத்ஸவம் நடைபெறம். சம்பந்தரின் உலாத்த்ிருமேனி எழுந்தருளல் நடைபெறும்.
திருவீழிமழலையில் முட்டையாறு எனப்படும் க்ஷீரநதி - அரிசொலாறு எனப்படும் அரசலாறு சங்கமம் காண ்
தியாகராஜ பிள்ளையார் கோவிலை அடுத்து போகும் பாதையில் கிழக்கே போக வேண்டும். தை அமாவாசை ்
தொடங்கி சிவராத்ரி அமாவாசை வரை விடியற்காலை ஸ்நானம் செய்வார்கள். விஷ்ணுபுரத்திலிருந்து ்
ஆண்களும் பெண்களும் வருவார்கள்.
தேவாரத்திருத்தலம்