கார்த்திகை ஞாயிறன்று ஸ்ரீ வாஞ்சியத்து குப்த கங்கையில் நீராட விஸ்வநாதருடன் வந்த விசாலாட்சி இவ்வூர் வளப்பாற்றங்கரையில் இளைப்பாற அமர்ந்தாள். மேற்கு முகமாக ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள்.
இந்த சிவலிங்கத்தை பூஜிப்பவர்கள் 108 சிவலிங்கங்களை பூஜித்த பலன் பெறுவர் என ஐதீகம். அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஸ்ரீ ராமபிரான் தாடகையை துரத்தி வந்தபோது, தாடகை இவ்வூருக்கு வந்து ஒளிந்து கொண்டதால் இவ்வூர் தாடக - அந்த - புரம் - தாடகாந்தபுரம் என்றாயிற்றாம். தாமரைத் தடாகத்துடன் முக்கோண வடிவமானதால் தாடக கோணம் என்றழைக்கப்பட்டு, தற்போது தட்டாத்தி மூலை என அழைக்கின்றனர்.