வழி காட்டும் வள்ளல் எனப் போற்றப்படுவதால் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கின்றனர். இவருக்கு கார்த்திகை மாத கடைசி வியாழன் நடைபெறும் மகா அபிஷேகம் சிறப்பானது. அது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
குரு பகவானின் சோதனைக்கு ஆளானவர்கள் இத்தலம் வந்து மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
நந்தி ஆணவத்தையும் சேர்த்து சுமந்தது. தன்னால்தான் இறைவன் நினைத்த இடங்களுக்கு விரைவாக சென்று வர முடிகிறது என எண்ணியது. நந்தியின் நிலையை அதற்கு உணர்த்தினார் இறைவன். கர்வம் கொண்டதன் பாவம் தொலைய, இவ்விறைவனை பூஜித்து நற்கதி பெற்றது நந்தி.
ரிஷப தேவருக்கு உபதேசம் செய்த அதன் மீதமர்ந்து மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்ட ஸ்தலம் இது. சாமுண்டி வழிபட்ட ஸ்தலம்.
ஐப்பசியில் துலா மாத விழா நடைபெறும் போது, ரிஷப தீர்த்தத்திற்கு உலா செல்லும் மூர்த்திகள். கார்த்திகை மாத கடைசி வியாழன் தினத்தன்று மேதா தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகம் செய்வார்கள்.
மயிலாடுதுறையை சுற்றி நான்கு திசைகளிலும் தட்சிணாமூர்த்தியை வள்ளல் என்று அழைக்கின்றனர்.