கடலில் மிதந்து வந்த சிவலிங்க மூர்த்தத்தை, காஞ்சி மஹா பெரியவரின் யோசனைப்படி இங்கு பிரதிஷ்டை செய்து இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்திலுள்ள விநாயகர் ரமண மகரிஷியால் வழிபடப்பட்டவர் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
பிரதோஷ வேளை பூஜைகள் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றன. சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யும்போது காண்பது ஆனந்தமாக இருக்கும்.