பிரார்த்தன் எனும் அரசன் இவ்வூர் மல்லிகை வனத்தில் இறைவனை மனதில் நிறுத்தி இடைவிடாது பூஜித்து பல வேள்விகளை நடத்தி வந்தான். அவனது வேள்விக்கு ஏற்பட்ட இடையூறுகளைப் பொறுத்து மனம் தளராது வேள்விகளை தொடர்ந்து நடத்தி வந்தான். சிவபெருமான் பார்வதி தேவியோடு அவனுக்குக் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆதியில் மல்லிகை வனமாக இருந்த இப்பகுதியில் தோன்றிய சிவலிங்கம் என்பதால் இறைவனுக்கு மல்லீஸ்வரர் என்றுப் பெயர் வந்தது.
சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் இதுவும் ஒன்று.