புழுகீசம் என்றும் பாரிஜாதவனம் என்றும் ஆதியில் அழைக்கப்பட்ட இவ்வாலயம் அருகே வசித்து வந்த பூனைகள் இவ்விறைவனை ஆசையாக வழிபட்டன. இதனால் மகிழ்ந்த இறைவன், பூனைகளுக்கு அருள் புரிந்தார். புழுகீசர் என பெயரும் கொண்டார்.
சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபமடைந்து புனுகுப் பூனையாக மாறி பூலோகம் வந்தான். தனியூரிலுள்ள வனத்தில் இருந்து கொண்டே, தினமும் இங்கு வந்து புனுகால் பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இங்கு செய்யும் சிறு தானம் கூட அளவில்லாத பயன் தரும் எனக் கூறுவர். இங்கு முன்னோர்களுக்கு செய்யும் கடன்கள் கயாவில் செய்வதற்கு சமம் என்றும் கூறுவர்.