ராஜராஜேச்வரம், பெரிய கோவில், ப்ருகதீஸ்வரர் கோவில் என்றெல்லாம் பெயர்கள் கொண்டிருந்தாலும்  ்பெரிய கோவில் ்
என்றே பிரசித்தம். கி.பி. 1003ல் தொடங்கி 1009ல் நிறைவு பெற்ற இக் கோவிலை கட்டுவித்தவர் ராஜ ராஜ சோழன்.
சுந்தர சோழனுக்கும் - வானவன்மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது பிள்ளை அருண்மொழித் தேவன். தமக்கை ்
குந்தவை பிராட்டியாரால் வளர்க்கப்பட்டு அரியணை ஏறினான். ராஜ ராஜன் எனும் பெயர் கொண்டான்.
ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலமாக போற்றப்பட்டது.
மூலஸ்தானத்து விமானம் 216 அடி உயரம் கொண்டுள்ளது. பீடம் முதல் கலசம் வரை முழுவதுமாக கருங்கல் கொண்டு ்
கட்டப்பட்டது. உச்சியில் மூடப்பட்ட பிரமாந்திரக்கல் 80 டன் எடை உள்ளது. இந்த விமானத்திற்கு பொன் வேய்ந்து அழகு
பார்த்திருக்கின்றான் ராஜ ராஜ சோழன். விமானத்தின் மீதுள்ள கலசம் 12 அடி உயரம் கொண்டுள்ளது. 3083 பலம் ்
செம்பினால் உருவாக்கப்பட்டது. 2926 கழஞ்சு பொன் பு+சிய தகடு வேய்ந்துள்ளனர்.
விமானத்தை வேய பொன் தந்த ராஜராஜ சோழன், 829 கழஞ்சு எடையில் செய்யப் பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர்
திருமேனி உருவாக்க பொன்னும், 995 கழஞ்சு எடையில் செய்யப்பட்ட  ்பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலி பீடம் செய்ய பொன்னும் ்
கொடுத்துள்ளார்.
39925 கழஞ்சு தங்்க ஆபரணங்கள் (175 கிலோ) மற்றும் ஏராளமான வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவை ராஜராஜனால் ்
இக்கோவிலுக்கு வழங்கப்பட்டு்ள்ளது. தேவையான பு+ஜா பாத்திரங்கள் அனைத்தையும் குந்தவை பிராட்டியார் ்
வழங்கியுள்ளார். பிரஹந் நாயகிக்கு 2343 கழஞ்சு தங்க ஆபரணங்களையும் குந்தவை பிராட்டியார் வழங்கியுள்ளார்.
தினமும் விநாயகருக்கு 150 வாழைப்பழம் நைவைத்யம் செய்ய வேண்டும் என்று நிபந்தித்த சக்ரவர்த்தி, ஆண்டுக்கு
150 ஓ 360 ஸ்ரீ 54000 பழங்களுக்கு ஏற்பாடு செய்யும் வகையில், அன்றைய விலையான ஒரு காசுக்கு 1200 பழங்கள் ்
என்ற அடிப்படையில், 360 காசுகளை ஆலய பண்டாரத்தில் முதலீடாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் (12.5மூ)  ்
கொண்டு தினமும் பழங்கள் வாங்கும் வகை செய்தார் என்று கூறப்படுகிறது.
காசு ஒன்றுக்கு 2 ஆடுகள், 2 காசுக்கு ஒரு பசு, 3 காசுக்கு ஒரு எருமை என்ற விலையை கொடுத்து ஆயிரக்கணக்கான ்
விலங்குகளை வாங்கி, கோவிலுக்கு அர்ப்பணித்தார். அதிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் ஆகியவற்றை ்
கோவிலின் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
காலத்தால் கோவில் சிதிலம் அடையாமலிருக்க திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு யாகம் நடத்தி வழிபட்டுள்ளார் ்
ராஜராஜன்
1954ம் ஆண்டில் இருந்த பெரிய கோவிலின் தோற்றத்தை பிரிண்ட் செய்த 1000 ரூபாய் நோட்டை 48வது ரிசர்வ் பேங்க் ்
கவர்னர் வெளியிட்டுள்ளார் . சர் பெனகல் ராமாராவ் கையெழுத்திட்டுள்ளார் .
ஐக்ய நாட்டு கல்வி - அறிவியல் - பண்பாட்டு நிறுவனத்தால், 1987ம் ஆண்டு, இக் கோவிலை உலக பாரம்பர்ய சின்னமாக ்
அறிவிக்கப்பட்டது.
ராஜராஜ சோழனின் உருவம் பதித்த 2 ரூபாய் நோட்டு ஒன்றை, 1997ம் வருஷம், மத்ய அரசு வெளியிட்டது.
2010ம் ஆண்டு, பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ்
(செப்படம்பர் 25, 26) அப்போது ரூ.5 முத்திரை நாணயம் வெளியிடப்பட்டது.
சிவாஜி கணேசனால் இவ்வாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெள்ளையம்மாள் எனும் யானை 63 வயது வரை ்
வாழ்ந்து கோவில் பணிகளை செய்து சமீபத்தில் உயிர் நீத்தது எனக் குறிப்பொன்று கூறுகிறது.