தேவலோக மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து, இத்தலத்தைப் பாரிஜாதவனமாக்கி, தீர்த்தம் ஒன்றையும் உண்டாக்கினார் துர்வாசர். பாரிஜாத மரத்தடியில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். தனக்கும் நடன தரிசனம் தந்தருள வேண்டுமென்று இறைவனிடம் விண்ணப்பித்தார்.
அவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், துர்வாசருக்கு பிரம்ம தாண்டவ தரிசனம் தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
'களரி' என்றால் சபை. துர்வாச முனிவர்க்கு 'களரியாட்டம்' எனும் நடன தரிசனம் தந்தவர் இவ்விறைவன். ஆகையால், 'களரி' எனப் பெயர் கொண்டு நாளடைவில் 'களர்' என மாறியதாகக் கூறுவர். களர் நிலத்தில் உள்ளதால் இப்பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.