சிவ பக்தரான வியாபாரி ஒருவர் மிளகு மூட்டைகளுடன் பயணித்தார். வழியிலுள்ள சுங்க சாவடியில், மிளகுக்கு அதிக சுங்கவரி கட்ட நேரிடும், அதனால் லாபம் குறையும். இவற்றை தவிர்த்து காப்பாற்ற வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டு விட்டு படுத்து தூங்கினார் வியாபாரி.
காலையில் எழுந்து பயணத்தைத் தொடர்ந்தார். சுங்கசாவடியருகே வரும்போது மூட்டைகள் அவிழ்ந்து அதிலிருந்து பயறு கொட்டியது. சோதித்து பார்த்ததில் அத்தனை மூட்டைகளிலும் பயறு இருந்தன. சுங்க சாவடியைக் கடந்ததும் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின.
மிளகு பயறாக மாறியதால் இவ்வூரை பயற்றூர் என்றும், இறைவனை பயற்றீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
வாணிபத்திலும் பொருள் இறுதியாக உடன் எடுத்து செல்ல முடியாத செல்வம் வேண்டாமென முடிவெடுத்த வியாபாரி, தனது செல்வங்கள் அனைத்தையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து விட்டு, துறவறம் பூண்டு, பின்னர் இறைவனடி சேர்ந்தார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்