அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

Primary Deity
ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

குபேரன் கையிலிருந்த அமிர்தம் இத்தலத்தில் சிறிதளவு சிந்திவிட, சிந்திய இடத்தில் சிவலிங்கம் சுயம்புவாக வெளிப்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு அமிர்த தாரைகள் வழியும் லிங்கமாக எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

போகர் சித்தர் நவபாஷாணத்தால் உருவாக்கிய லிங்கமென்றும், சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அபிஷேகப் பொருட்களை உட்கொண்டால் பிணிகள் தீருமென்றும் நம்பிக்கை உள்ளது.

மூலவர்: ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர்.

இரண்டு ஆமை ஓடுகளைப் பொருத்தியது போன்ற அமைப்பில் வித்தியாசமான தோற்றம். கருப்பு - வெள்ளைக் கோடுகளை, மேலிருந்து கீழாகக் கொண்டுள்ளார்.

ஐந்து மாறுபட்ட காலங்களில், ஐந்து வித வண்ணங்களில் மாறும் அதிசய லிங்கம் என்பதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம்.

தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளார்.

காசி விஸ்வநாதர் லிங்கத்திற்குக் கற்பூர ஆரத்தி காண்பிக்கும்போது, லிங்கத்தில் ஜோதி தெரிகின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...