திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரில் வரும் வேகத்தில், அவர் அணிந்திருந்த கொன்றை மலர் விழுந்த இடமே இலம்பையங்கோட்டூர். இங்குள்ள மல்லிகை வனத்தில் எட்டு கன்னிகைகள் ரம்பையோடு சேர்ந்து இவ்விறைவனை வழிபடுகின்றனர்.
என்றைக்கும் மாறாத இளமை வேண்டுமென ரம்பை பிரார்த்தித்து கொண்டாள். மாறாத இளமை என்பது உடலா, ஞானமா? எனக் கேட்டதற்கு ஞானம் என்று பதிலளித்தாள் எனக் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலைத் தேடி அலைந்தபோது சிறுவனாகவும், வயோதிக வடிவத்திலும், பசு வடிவத்திலும் வந்து அழைத்தாராம்.
காஞ்சி மஹா பெரியவர் இங்கு சில காலம் தங்கி இவ்விறைவனை வழிபட்டு அம்பாளின் பாதத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்தார் எனக் கூறுவர். வேதப் பாடசாலை ஒன்றும் நடத்துகின்றனர்.
தேவாரத் திருத்தலம்.