வானர அரசன் வாலி வழிபட்ட இறைவன். இதனால் இவ்வூர் குரங்காடுதுறை எனப் பெயர் கொண்டது. இரண்டு குரங்காடுதுறைகள் இருப்பதனால் வேறுபடுத்த வேண்டி இவ்வூரை வடகுரங்காடுதுறை என அழைக்கின்றனர்.
வாலி ராவணனுடன் போரிட்டபோது தனது வாலை இழந்தான். அறுபட்ட வால் வளர இறைவனை வழிபட்டு நன்மைகள் பெற்றான்.
கொடும் வெய்யிலில் நடந்து வந்த கர்ப்பிணிப் பெண் ஒருத்தி பசியும் தாகமும் மேலிட இவ்வாலயத்து மதிற்சுவரில் சாய்ந்து வீழ்ந்து "பிரபோ தயாநிதி" எனக் குரல் கொடுக்கின்றாள். தென்னை மரத்து குலைகளை, பெண்ணின் வாய்க்கு நேராக வரும்படி வளைத்து வரவழைத்து கருணை புரிந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்