யமபயம் நீக்கிடும் இவ்விறைவனை, மதுரையில் அவதரித்த இரண்டு கோகர்ணர்கள் ஸ்தாபித்து பூஜித்து வழிபட்டதாக குறிப்பொன்று கூறுகிறது. இருவரும் இரண்டு இடங்களில் லிங்கம் ஸ்தாபித்தனர். ஒன்று வண்டாம்பாளையம் என்ற இடம். இதை உத்தர கோகர்ணேஸ்வரர் என்பர். அடுத்தது புலிவலம். இதை தட்சிண கோகர்ணேஸ்வரர் என்பர்.
கோகர்ணர்கள் வழிபட்டதால் இறைவனுக்கு கோகர்ணேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வழிபட்டால் யமபயம் நீங்கும்.
மங்களூரிலும், புதுக்கோட்டையிலும் கோகர்ணேஸ்வரர்கள் இருப்பதால் இவரை தட்சிண கோகர்ணேஸ்வரர் என்று அழைக்கின்றனர். வியாக்ரபாதர் வழிபட்ட ஸ்தலங்களுள் ஒன்று என்பதால் புலிவலம் எனப் பெயர் கொண்டது.
தேவார வைப்புத்தலம்.