அமிர்தம் கடையும் பணியில் சிவபெருமான் நஞ்சை உட்கொண்டது ஒரு புராண வரலாறு. அந்தப் பாவத்தைத் தொலைக்க வேண்டி வாசுகி வருந்தியது.
நாவல்வனமாகத் திகழ்ந்த இப்பகுதியில் சிவபெருமான் ஜலஸ்வயம்புவாக எழுந்தருளியிருப்பதாகத் தெரிந்துகொண்டு, இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டுத் தோஷங்களைப் போக்கிக்கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஸ்ரீ பொன்னம்பல ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ திருமேனிலிங்க ஸ்வாமிகள் எனும் இரட்டை சித்தர்கள், இங்குள்ள அகழி தீர்த்தம் (குளம்) அருகே சமாதியடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
திருப்போரூர் முருகன் புரிந்த போரில் துண்டிக்கப்பட்ட அசுரனின் சிரம் விழுந்த இடம் 'சிரம் பாகம்' எனப் பெயருற்று, பின் மருவி 'சிரம்பாக்கம்' என்றாகி தற்போது 'செம்பாக்கம்' என்றானதாகக் கூறப்படுகிறது.