்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ செல்வ மாகாளி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அசுரனை காலில் போட்டு மிதித்தபடி காட்சி தருகின்றாள். அஷ்டபுஜங்களுடன் கூடிய மிகப் பெரிய திருமேனி. கைகளில் ஏந்தியுள்ள சூலத்தால் குத்துவது போன்ற தோரணையில் காணப்படுகின்றாள். சோழ பேரரசின் அஷ்ட காளிகளுள் முதன்மையானவள். ராஜராஜ சோழன் எங்கு சென்றாலும் இவளை வணங்கி விட்டுத்தான் செல்வார் என்பார்கள். பங்குனி மாதம் 3ஆம் புதன்கிழமை நடக்கும் விழா பிரசித்தி பெற்றது. ஹரிஜனங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் விழா. இவர்கள் காளியின் முன்பாக வாசிக்கும் தப்பு பிரசித்தி பெற்றது. முன்னோட்டம்/பின்னோட்டம் பார்க்க பரவசமாக இருக்கும். தேரோட்டம், தெப்போத்ஸவம் ஆகியன நடக்கும் பிரதான விழா. நீர்மோர், பானகம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியன நைவேத்தியம் செய்து விநியோகிக்கின்றனர். முருகக்கடவுள் இங்கு குமர தீர்த்தம் உண்டாக்கி தவமிருந்ததாக ஐதீகம். அருகேயுள்ள சிவாலயத்தில் கைலாசநாதர் மூலவராக எழுந்தருளி அருள் புரிகின்றார். இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தட்ச நிந்தனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்கள் அவரவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்களிலிருந்து விடுபட கைலாசநாதரை வழிபட்டனர். அயோத்தியைச் சேர்ந்த அஜ மகாராஜா குமார தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, பஞ்சாட்சர தீபம் ஏற்றி, பஞ்சாட்சர ஜபம் செய்து, தனக்கு வந்த நோயிலிருந்து குணம் பெற்றான் என ஸ்தல வரலாறு. அய்யனார் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இவ்வூர் நாம சங்கீர்த்தனத்திற்கு பிரசித்தி பெற்றது.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.