சிவபெருமானை நோக்கி தவமிருந்த பார்வதி தேவி, சிவபெருமானின் செம்மேனி கோலத்தை அதாவது ஜோதி வடிவத்தை தரிசித்த ஸ்தலம். க்ஷத்ரியர்களைக் கொன்ற தோஷம் நீங்க பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றுள்ளார். சூரியன் வழிபட்ட ஸ்தலம்.
1924 ஆம் ஆண்டு கொள்ளிடத்து பெரு வெள்ளம் இவ்வாலயத்தை மூழ்கடித்ததால் மணல்மேடாகிப் போன இத்தலத்தை தற்போது மணல்மேடு என அழைக்கின்றனர்.