அருகேயுள்ள பந்தணைநல்லூரில் அம்பிகை பசு உருவம் கொண்டு, லிங்கத்தின் மீது பால் பொழிந்து வழிபட்டாள்.
அந்தப் பால் இவ்வூரை அடைந்து தேங்கி நின்று நெய்யாக மாறி நெய்க்கூபம் எனப் பெயர்கொண்டது. அதுவே தற்போது மருவி நெய்க்குப்பை என்றானது. தேவி நெய் கொண்டு இறைவனை அபிஷேகித்ததாகக் கூறுவர்.
சூரிய பகவான் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இவ்வூரின் மற்றொரு சிவாலயமான சோழீஸ்வரர் ஆலயத்தில் சோழீஸ்வரரும், தோளியம்மையும் எழுந்தருளி அருள்புரிகின்றனர். ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் அறுவடை அமோகம் என விவசாயப் பெருமக்கள் கூறுகின்றனர்.