சோழ மன்னனின் கட்டளைப்படி திருக்கடவூர் ஆலயத்தைப் புதுப்பித்த அமைச்சர் இளங்கார முனிவர், தில்லையாடி ஆலயத்தையும் அரசனிடம் கேளாது புதுப்பித்து விட்டார். தன்னைக் கேட்காது தன்னிச்சையாக செய்த இச்செயலினால் கோபமுற்ற மன்னன், அமைச்சரின் கை கால்களை சேதம் செய்ய உத்தரவிடுகிறான். "அமைச்சரின் சிவாலயப் பணிகளை நான் ஏற்றேன்" என சிவபெருமான் அசரீரியாக தெரிவித்தார். மனம் வருந்திய மன்னன் மன்னிக்க வேண்டினான். இறைவனருளால் வெட்டுண்ட கை கால்கள் அமைச்சருக்குத் திரும்பப் பொருந்தின என வரலாறு.
இளங்கார முனிவர் சிதம்பரத்துப் பொற்சபை நடனத்தைக் காண வேண்டியதால், இத்தலத்தில் நடனமாடினார் இறைவன். இதனால் இவ்வூருக்கு தில்லையாடி எனப் பெயர் வந்தது.