திருவீழிமழலையில் சக்ராயுதம் பெற்ற திருமால், மாப்பிள்ளைசாமி - காத்யாயினி திருமணம் முடிந்ததும் அவர்களை பூஜிக்கும் பொருட்டு அரிசொல் நதியை வரவழைத்தார். அரிசொல் நதிக்கரையின் தென்கரையில், கௌதம மகரிஷி ஓர் ஆலயம் ஸ்தாபித்து அதில் கைலாஸநாதரையும் அமிர்தேச்வரியையும் பிரதிஷ்டை செய்தார்.
மஹாவிஷ்ணுவே இங்கு நேரில் தோன்றி தரிசனம் தந்ததால் விஷ்ணுபுரம் எனப் பெயர் கொண்டது.
முட்டையாறு எனப்படும் க்ஷீர நதியும், அரிசொலாறும் சங்கமம் ஆகுமிடத்தில் (திருவீழிமழலை) இவ்வூரை சேர்ந்த ஆடவரும் பெண்டிரும் ஸ்நானம் செய்வார்கள். தை அமாவாசையில் தொடங்கி, சிவராத்திரி அமாவாசை வரை விடியற்காலை வேளையில் ஸ்நானம் செய்வார்கள்.