ஜனகமகாராஜன் நடத்திய பெரிய வேள்வியில், ஜனகரின் தலைமைப் பண்டிதனான வந்திப் பண்டிதர் என்பவர் வேத விற்பன்னர்களை வாதம் புரிய அழைத்து தோற்கடித்து வந்தார். தோற்றவர்களை கங்கையில் மூழ்கச் செய்தார்.
அவனது கர்வத்தை அடக்க அஷ்டவக்ரன் எனும் சிறுவன் வந்தான். அவனுக்கு முதுகில் கூன், ஒரு கை முன்புறம், மற்றொரு கை பின்புறம் மடங்கியபடி இருந்தது. விகாரமான தோற்றம் கொண்ட அஷ்டவக்ரன், சிறு வயதிலேயே உத்தாலக முனிவர் நடத்தும் குருகுலத்து மாணவர்களுக்கு தீட்சை அளித்தவன். போட்டியில் வந்திப் பண்டிதரை தோற்கடித்தான்.
இத்தனை திறமைகள் கொண்ட அச்சிறுவன், இவ்விறைவனை வழிபட்டு, கூன் நிமிரப் பெற்று, அழகிய புது வடிவம் கொண்டான்.